குமாரபாளையத்தில் மாஸ் கிளீன் செய்த நகராட்சி பணியாளர்கள்

குமாரபாளையத்தில் மாஸ் கிளீன் செய்த நகராட்சி பணியாளர்கள்
X

நகராட்சி தூய்மை பணியாளர்கள் கோம்பு பள்ளத்தில் மாஸ் கிளீன் செய்தனர்.

குமாரபாளையத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மாஸ் கிளீன் செய்தனர்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் எனும் தமிழக அரசின் திட்டம் சார்பில் குமாரபாளையத்தில் சில நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 33 வார்டு பகுதியிலும் மாஸ் கிளீன் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று கோம்பு பள்ளம் தூய்மை செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை எதிரில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது. கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் மேம்பாலம் கீழ் பகுதியில் சுவற்றில் உள்ள சினிமா போஸ்டர்கள் அகற்றப்பட்டன. பிளாஸ்டிக் ஒழிக்கும் வகையில் பொதுமக்களுக்கு சேர்மன் விஜய்கண்ணன், பொதுநல ஆர்வலர் அண்ணாதுரை, நகராட்சி கமிஷனர் விஜயகுமார், எஸ்.ஒ. ராமமூர்த்தி, எஸ்.ஐ. க்கள் செல்வராஜ், பங்கேற்று, பொதுமக்களுக்கு மஞ்சள் பைகள் வினியோகம் செய்யப்பட்டது.

Tags

Next Story