/* */

பள்ளிபாளையத்தில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

பள்ளிபாளையம் சுற்றுப்பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதி அருகே பெய்த சாரல் மழை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், இன்று காலைமுதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலையில் சாரல் சாரலுடன் கூடிய மழை பெய்தது. பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி, பெரியார் நகர், ஆவாரங்காடு, அக்ஹகாரம், ஒட்டமெத்தை, நேரு நகர், ஜீவா ஷெட், குமாரபாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 10 July 2021 12:30 PM GMT

Related News