/* */

மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில்,  மின் கம்பங்களில் விளக்குகள் அமைக்கக்கோரி, மனு கொடுக்கப்பட்டது.

--

குமாரபாளையம் நகராட்சி, 3வது வார்டு போலீஸ்காரர் லைன் வீதி, கிழக்கு காவேரி நகர், ராஜராஜன் நகர் பகுதி உள்ளிட்டவை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்குள்ள மின் கம்பங்களில், பல மாதங்களாக மின் விளக்கு அமைக்கப்படாததால் இரவில் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, விஷமிகள், சமூக விரோதிகளால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

இது குறித்து, மக்கள் நீதிமய்யம் கட்சி மாநில மகளிரணி தலைவி மூகாம்பிகாவிடம், நகர மகளிரணி நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். மூகாம்பிகாவின் அறிவுறுத்தல்படியும், மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல்படியும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் நகர மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, விஜயகுமார், சரவணன், யோகராஜ், கார்த்திக் ஆகியோர், குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம், மின் விளக்குகள் அமைத்து தர வேண்டி மனு கொடுத்தனர். இது பற்றி பரிசீலித்து மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் சசிகலா தெரிவித்தார்.

Updated On: 7 Dec 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...