/* */

குமாரபாளையத்தில் மக்களை மகிழ்வித்த நள்ளிரவு மழை, வான் மேக மூட்டம்

குமாரபாளையத்தில் நள்ளிரவு மழை மற்றும் நாள் முழுவதும் வான் மேக மூட்டம் மக்களை மகிழ்வித்தது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மக்களை மகிழ்வித்த நள்ளிரவு மழை, வான் மேக மூட்டம்
X

குமாரபாளையத்தில் வான மேக மூட்டத்தால், வெயில் இல்லாததால் பொதுமக்களும் வெயில் அச்சமின்றி சாலையில் சென்றதை காண முடிந்தது.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்றுமுன்தினம் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இதனால் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், வயதானாவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் பெய்த சாரல் மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. நேற்று காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் வானம் இருந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெயில் இல்லாததால் நேற்று நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் பெரும்பாலான பள்ளிகளில் வெட்ட வெளியில் நடைபெற்றன. பொதுமக்களும் வெயில் அச்சமின்றி சாலையில் சென்றதை காண முடிந்தது.

Updated On: 20 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...