கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரும் வியாபாரிகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரும் வியாபாரிகள்
X

குமாரபாளையம் -பவானி பிரதான சாலையில் தங்கள் கடைகளை மாலை 05 க்கு அடைத்த வியாபாரிகள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பவானி வியாபாரிகள் ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரும் குமாரபாளையம் வியாபாரிகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பவானி வியாபாரிகள் ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினமும் மாலை 5:00 மணிக்கு வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைக்க நகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கூறியிருந்தனர்.

அதன்படி, அனைத்து வியாபாரிகளும் தினமும் மாலை 05:00 மணிக்கு யாரும் சொல்லாமலேயே தானாக முன்வந்து தங்கள் கடைகளை அடைத்து வருகின்றனர்.

இது பற்றி நகராட்சி கமிஷனர் லீலா சைமன் கூறியதாவது:மாலை 05:00 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்திருக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்கு வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் என்றார் அவர்.


Tags

Next Story