மதுபோதையில் நிலைதடுமாறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு
X
By - K.S.Balakumaran, Reporter |21 April 2022 5:55 AM IST
குமாரபாளையத்தில் மது போதையில் நிலைதடுமாறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
குமாரபாளையத்தில் மது போதையில் நிலைதடுமாறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
குமாரபாளையம் அருகே ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு, 40. கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் சேலம் சாலை ஸ்டேட் வங்கி எதிர் பகுதியில் மது போதையில் கீழே விழுந்து கிடந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தர, இவரை குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு கொண்டு சென்று பார்த்தபோது இவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu