பெருந்துறை மருத்துவமனையில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை மருத்துவமனையில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த குமாரபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

குமாரபாளையம் விட்டலப்புரியை சேர்ந்தவர் மூர்த்தி, 48. கூலித்தொழிலாளி. இவர் இதயநோய் காரணமாக பிப். 28ல் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், நேற்று மாலை 06:30 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare