குமாரபாளையம்; தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

குமாரபாளையம்; தூய்மை பணியாளர்களுக்கு  மருத்துவ முகாம்

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலக தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலக தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே எங்களின் சேவை திட்டம் சார்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் கண் சிகிச்சை, பெண்களுக்கான சிகிச்சை, மூட்டு வலி, சர்க்கரை அளவு சரிபார்த்தல், மற்றும் பொது மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் ஆணையாளர் குமரன், பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ஜேம்ஸ், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story