Begin typing your search above and press return to search.
குமாரபாளயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
ஆடி அமாவாசை முன்னிட்டு நேற்று குமாரபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
HIGHLIGHTS
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இறைச்சி கடையினர் வாழ்வாதாரம் இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். சில தளர்வுகளுடன் இறைச்சி கடைகள் மீண்டும் செயல்பட்டன.
நேற்று ஆடி அமாவாசை என்பதால் ஆட்டிறைச்சி, கோழி, மீன் இறைச்சி வாங்க பொதுமக்கள் வராததால் குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடியது.
இதனால் குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இறைச்சி வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.