குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்ற நபர் கைது

X
By - K.S.Balakumaran, Reporter |5 April 2022 4:00 PM IST
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு அரசு மதுபாட்டில்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டு, 6 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு அரசு மதுபாட்டில்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டு, 6 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம் காலனி பஸ் நிறுத்தம் அருகே அதிக விலைக்கு அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யபடுவதாக ரகசிய தகவல் குமாரபாளையம் போலீசாருக்கு கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. நந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணி சென்ற போது, அங்கு அதிக விலைக்கு அரசு மதுபாட்டிகள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், குமாரபாளையம் முருங்கைக்காடு பகுதியை சேர்ந்த நடராஜன், 42, என்பது தெரியவந்தது. கையும், களவுமாக பிடித்த போலீசார், அவரை கைது செய்து, பிளாக் டிரம் எனும் 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu