மகா சிவராத்திரி, பிரதோஷம்: குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

மகா சிவராத்திரி, பிரதோஷம்: குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
X

திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மகா சிவராத்திரி, பிரதோஷம் நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகா சிவராத்திரி, பிரதோஷம் நாளையொட்டி குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதேபோல் கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், வேதகிரீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture