/* */

அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது - 60 மது பாட்டில்கள் பறிமுதல்

குமாரபாளையத்தில், இரு இடங்களில் அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்; 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

அதிக விலைக்கு மது விற்ற இருவர் கைது - 60 மது பாட்டில்கள் பறிமுதல்
X

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில், மது விற்பதாக தகவல் கிடைத்து. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், எஸ்.ஐ. க்கள் மலர்விழி, சேகரன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். பெட்டிக்கடை வைத்திருக்கும் சுந்தர்ராஜ், 65, என்பவர் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்றதை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவரிடம் இருந்து 48 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல் குமாரபாளையம் சரவணா தியேட்டர் அருகே, மது விற்று கொண்டிருந்த கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த பூமணி, 26, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 23 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!