குமாரபாளையம் அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி

குமாரபாளையம் அருகே மின்னல் தாக்கி    16 ஆடுகள் பலி
X

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி ஊராட்சி, வாளாங்காடு பகுதியில் இடி விழுந்து 16 ஆடுகள் பலியாகின.

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி ஊராட்சியில் மின்னல் தாக்கியில் 16 ஆடுகள் பலியாகின.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சமயசங்கிலி ஊராட்சி, வாளாங்காடு பகுதியில் பொன்னுசாமி (வயது63 ) என்பவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். வீடு அருகே இருக்கும் பட்டியில் தினமும் மாலையில் மேய்ச்சல் வேலை முடிந்து ஆடுகளை விட்டு அடைத்து விடுவார். நேற்றும் அதே போல் செய்தார். திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்தது. காலை 06:00 மணியளவில் பொன்னுசாமி பட்டிக்கு வந்து பார்த்தபோது இவர் வளர்த்த 20 ஆடுகளில் 16 ஆடுகள் இடி தாக்கியதில் இறந்து கிடந்தன. சேத மதிப்பு இரண்டு லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து வி.ஏ.ஓ. செந்தில்குமார், பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai in future agriculture