/* */

குமாரபாளையம் அருகே பட்டா நில பூங்காவில் இருந்த விளக்கு, ஊஞ்சல் அகற்றம்

குமாரபாளையம் அருகே பட்டா நில பூங்காவில் இருந்த விளக்குகள் மற்றும் ஊஞ்சல்கள் அகற்றப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே பட்டா நில பூங்காவில் இருந்த விளக்கு, ஊஞ்சல் அகற்றம்
X

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் பட்டா நில பூங்காவில் அகற்றப்பட்ட விளக்குகள், ஊஞ்சல்கள் அகற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் சிறுவர் பூங்கா 2 ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டது. இது தற்போது தனியாரின் இடம் என்பது தெரியவந்துள்ளது. நிலத்தின் உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி தனக்கு உரிய நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டி கேட்டுள்ளார். இதனால் பூங்கா செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால் பூங்காவில் உள்ள வண்ண, வண்ண விளக்குகள், ஊஞ்சல்கள் அகற்றப்பட்டன. இப்பகுதி பொதுமக்களின் பொழுது போக்கு இடமாகவும், காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வோருக்கு உதவியாகவும் இந்த பூங்கா இருந்து வந்தது. இந்த பூங்கா அகற்றப்படும் நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Updated On: 18 May 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்