காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம் !

காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா   ஏற்பாடுகள் தீவிரம் !

படவிளக்கம் : குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசித்திருவிழா மிக பிரபலமானது. 15 நாட்கள் பூச்சாட்டு, சக்தி அழைப்பு, மகா குண்டம் இறங்குதல், இரு நாட்கள் மகா தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, வாண வேடிக்கை, அம்மன் திருக்கல்யாணம், ஊஞ்சல் விழா, மஞ்சள் நீர் திருவீதி உலா என்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் முக்கியமானது. அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றக் கோரி அம்மனிடம் வேண்டுதல் வைத்து, அது நிறைவேறி, அலகு குத்திக்கொண்டும், குண்டம் இறங்கியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இந்த கோவிலின் மகா கும்பாபிஷேக விழா ஜன. 21ல் நடைபெறவுள்ளது. இதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டு, அரண்மனை யாகசாலை பந்தல் அமைக்கும் பணி, கோவில் வளாகம் முழுதும் வர்ண வேலைப்பாடுகள், சிற்ப வேலைபாடுகள் ஆகியன நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

கும்பாபிஷேக விழா நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவில் விழாவில் குண்டம் பராமரிப்பு குழுவினர் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். அவர்களும் இந்த ஆன்மீக பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள். பல வெளியூர், வெளி மாநிலங்கள், எலி நாடுகள் என பலதரப்பட்ட மகள் இங்கு வந்து மகா குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள். கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தகவலுக்காக

கும்பாபிஷேகத்தின் முக்கியத்துவம்

கும்பாபிஷேகம் என்பது ஒரு புனிதமான சடங்கு ஆகும். இந்த சடங்கு மூலம், அந்தக் கோயில் இறைவனின் இருப்பிடமாக அங்கீகரிக்கப்படுகிறது. கும்பாபிஷேகம் செய்வதன் மூலம், அந்தக் கோயிலின் தெய்வங்களின் சக்திகள் அதிகரிக்கப்படுகின்றன. மேலும், அந்தக் கோயிலுக்கு புனிதத்துவம் கிடைக்கிறது.

கும்பாபிஷேகம் என்பது ஒரு மகிழ்ச்சியான விழா ஆகும். இந்த விழாவில், பக்தர்கள் திரளாக கலந்துகொள்வார்கள். கும்பாபிஷேகத்தின் போது, சிறப்பு வழிபாடுகள், திருவிழாக்கள் போன்றவை நடைபெறுவதால், அந்தக் கிராமம் அல்லது நகரம் முழுவதும் ஒரு மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

கும்பாபிஷேகத்தின் வகைகள்

கும்பாபிஷேகம் என்பது பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவற்றில் சில:

புதிய கோயில் கட்டும்போது கும்பாபிஷேகம்: புதிய கோயில் கட்டப்படும்போது, அந்தக் கோயிலின் கும்பத்திற்கு புனித நீரை ஊற்றும் சடங்குதான் புதிய கோயில் கட்டும்போது செய்யப்படும் கும்பாபிஷேகம் ஆகும்.

பழைய கோயில் புதுப்பிக்கும்போது கும்பாபிஷேகம்: பழைய கோயில் புதுப்பிக்கப்படும்போது, அந்தக் கோயிலின் கும்பத்திற்கு புனித நீரை ஊற்றும் சடங்குதான் பழைய கோயில் புதுப்பிக்கும்போது செய்யப்படும் கும்பாபிஷேகம் ஆகும்.

தீர்த்தக் கோயில்களில் கும்பாபிஷேகம்: தீர்த்தக் கோயில்களில், கும்பத்திற்கு புனித நீரை ஊற்றுவதற்கு பதிலாக, அந்தக் கோயிலின் நீர்நிலைகளில் புனித நீரை ஊற்றுவதன் மூலம் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

பல கோயில்களில் ஒன்றாக கும்பாபிஷேகம்: ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் உள்ள பல கோயில்களில் ஒன்றாக கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த வகை கும்பாபிஷேகம் என்பது மிகவும் விமரிசையாக நடைபெறும்.

கும்பாபிஷேகத்தின் காலம்

கும்பாபிஷேகம் என்பது பொதுவாக புத்தாண்டு அன்று அல்லது ஆண்டுதோறும் வரும் பங்குனி மாதத்தில் நடைபெறும். இந்த இரண்டு காலகட்டங்களும் புனிதமான காலங்களாகக் கருதப்படுகின்றன.

Tags

Next Story