குமாரபாளையம் சவுண்டம்மன் திருக்கல்யாண வைபோகம்
குமாரபாளையம், சேலம் சாலையில் உள்ள சவுண்டம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபோகத்தையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
குமாரபாளையத்தில் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி சவுண்டம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன.
இதனையொட்டி, முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. சிவனின் வேடமிட்ட குழந்தையை மேள தாளத்துடன், சீர் வரிசைகளுடன் பக்தர்கள் அழைத்து வந்தனர். அலங்கரிக்க பந்தலில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சுவாமிகள் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு காட்சியளித்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, அம்மன் திருகல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu