/* */

குமாரபாளையம்: கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

சர்வர் இணைப்பு கிடைக்காததால் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க குமாரபாளையத்தில் மாணவ, மாணவியர் தவிப்புக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு
X

பைல் படம்.

அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பம் ஆன் லைனில் மாணவ, மாணவியர்கள் செய்து வந்த நிலையில், இரு நாட்களாக குமாரபாளையத்தில் சர்வர் இணைப்பு கிடைக்காமல் மாணவ, மாணவியர் தவிப்புக்குள்ளாகினர். இந்த கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூன் 30 என்பதால், நெட் சென்டர்களை தேடி மாணவ, மாணவியர் படையெடுத்து வருகிறார்கள்.

இது குறித்து அரசு கல்லூரி நிர்வாகிகள் கூறும்போது சர்வர் இணைப்பு கிடைக்காததால் விண்ணப்பம் செய்ய தாமதம் ஆகி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், அது மட்டும் காரணமல்ல. 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் விண்ணபித்தல், பெயர்களில் எழுத்துபிழை இருந்தாலும், வங்கி கணக்கு எண்கள் சில வங்கியில் 10 எண்கள், சில வங்கிகளில் 10க்கும் மேற்பட்ட எண்கள் இருப்பதாலும், இது போன்ற பல காரணங்களால் கூட தாமதம் ஏற்படுகிறது என்றார்கள்.

Updated On: 28 Jun 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு