/* */

குமாரபாளையம் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை

குமாரபாளையம் கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை தீயணைப்பு நிலையம் அருகில் திருட்டு முயற்சி நடைபெற்ற தட்டச்சு பயிற்சி மையத்தில் கைரேகை நிபுணர் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை தீயணைப்பு நிலையம் அருகில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருபவர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஜகன்நாதன், 38. இவரது கடைக்கு அருகில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருபவர் தங்கமணி, 57.

இந்த இரு கடைகளின் அருகில் பேக்கரி கடை உள்ளது. நேற்று காலை 7 மணியளவில் இங்கு டீ குடிக்க வந்தவர்கள் இந்த இரு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு வெளியில் கிடந்தது குறித்து, அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

டூவீலர் மெக்கானிக் கடையில் டேபிள் டிராயரில் வைக்கப்பட்டு இருந்த 45 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக அதன் உரிமையாளர் ஜகன்நாதன் கூறினார். அருகில் உள்ள தட்டச்சு கடையில் பணம் எதுவும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.

இது குறித்து குமாரபாளையம் போலீசில் இருவரும் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்