/* */

குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு

குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு
X

குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி ஆய்வு செய்தனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நிரம்பியது. இதனையடுத்து, காவிரி கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி, குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியான மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் தெரு, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, நகராட்சி நடராஜா திருமண மண்டபம் ஆகிய இடங்களை நேரில் ஆய்வு செய்தார்.

காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை, இருக்கும் வீடுகள் ஆகியன குறித்தும், இவர்கள் தங்க வைக்கப்படும் இடங்கள் குறித்தும், அங்கு தேவையான வசதிகள் செய்து தயார் நிலையில் உள்ளனவா? என்பது குறித்தும் சமூக பாதுகாப்பு திட தாசில்தார் சிவகுமாரிடம் கேட்டறிந்தார்.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ரவி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 9 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்