குமாரபாளையம் தாலுக்கா காவல் நிலைய, தனிப்பிரிவு காவலர்கள் பணி இடமாற்றம்

குமாரபாளையம் தாலுக்கா காவல் நிலைய, தனிப்பிரிவு காவலர்கள் பணி இடமாற்றம்
X

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலர்களின் இடமாற்றம் பற்றிய விபரம்.

குமாரபாளையம் தாலுக்கா காவல் நிலைய, தனிப்பிரிவு காவலர்கள் உள்பட, நாமக்கல் மாவட்டத்தில் 26 எஸ்பி தனிப்பிரிவு காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி 26 எஸ்.பி. தனிப்பிரிவு காவலர்களுக்கான இடமாறுதல் உத்தரவினை நாமக்கல் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் பிறப்பித்தார். அதனடிப்படையில், குமாரபாளையம் தாலுக்கா காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், குமாரபாளையம் தாலுக்கா, குமராபாளையம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக செயல்பட்டு வந்த கார்த்திகேயன், பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கும்; பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த கே.கோபாலகிருஷ்ணன், மொளசிக்கும்; வெப்படை புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முகிலன், வி.ஜி. பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், வெப்படையில் பணியாற்றிய கிருஷ்ண மூர்த்தி, குமாரபாளையம் காவல்நிலைய தனிப்பிரிவு காவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடம் மாறுதல் செய்யப்பட்ட அனைத்து எஸ்பி தனிப்பிரிவு காவலர்களும், நாளை திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
how to bring ai in agriculture