குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

குமாரபாளையம் பாண்டுரங்கர்  கோவிலில்   மண்டலாபிஷேக நிறைவு விழா
X

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழா மற்றும் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு கோவிலில் உள்ள விடோபா தாயார், மகாலட்சுமி தாயார், ஆண்டாள் , ஹனுமான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தி பாடல்கள் நிகழ்ச்சி, பஜனை, கோஷ்டி நர்த்தனம் நடைபெற்றது. கோவில் வளாகம் முழுதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai ethics in healthcare