கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன்

குமாரபாளையத்தில் நடராஜா நகர் பகுதியில் கட்டுமான பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.
குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சார்பில் இடைப்பாடி சாலையில் அரசு மருத்துவமனை அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இது அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கட்டிடங்கள் மிகவும் சேதமானது. இதனை புதுப்பிக்கும் பணி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 278.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருவதால், பேருந்துகள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், மார்க்கெட் கட்டுமான பணிகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்து, பணிகள் தரமாக விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
மேலும் சேர்மன் விஜய் கண்ணன் ஆனங்கூர் பிரிவு, அரசு மேனிலைப்பள்ளி சாலை பகுதி பள்ளம் குறித்து ஆய்வு செய்து, அதனை சரி செய்ய உத்தரவிட்டார். சத்யாபுரி, நடராஜா நகர் பகுதியில் பழுதான மழைநீர் வடிகால் சேதம் குறித்தும், கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்து, பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தினார். கவுன்சிலர் ஜேம்ஸ், நிர்வாகிகள் கதிரேசன், சரவணன் உள்பட பலர் அப்போது உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu