Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் அரசு பள்ளியில் நகராட்சி சேர்மன் ஆய்வு
குமாரபாளையம் நகராட்சி சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளியில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் சென்று தலைமை ஆசிரியர் சுப்பிரமணியிடம் பள்ளிக்கு தேவையான பணிகள் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து விஜய்கண்ணன் கூறியதாவது,
இந்த பள்ளியில் வகுப்பறை தேவைகள், பைப் லைன் பழுது, கழிப்பிட பராமரிப்பு, ஆர்.ஒ. பிளாண்ட் உள்ளிட்டவை குறித்து தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். விரைவில் இதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளின் தேவைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று கூறினார்.
இதில் நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் வேல்முருகன், ராஜு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.