குமாரபாளையம் நகராட்சி தலைவர் கோரிக்கை ஏற்று சாலை அமைக்க ரூ.1 83 கோடி ஒதுக்கீடு

குமாரபாளையம் நகராட்சி தலைவர் கோரிக்கை ஏற்று சாலை அமைக்க ரூ.1 83 கோடி ஒதுக்கீடு
X

குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்,நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையாவை சந்தித்து, அம்மன் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தரக்கோரி மனு வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்று அம்மன் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி தலைவர் கோரிக்கையை ஏற்று அம்மன் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்க ஒரு கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

குமாரபாளையம் அம்மன் நகர் சாலை சுமார் 20 ஆண்டுகளாக, சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர் தர்மராஜன் ஆகியோர் நகராட்சி தலைவர் விஜய் கண்ணனிடம், அம்மன் நகர் பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையாவை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் அம்மன் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தரக்கோரி கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் அம்மன் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூபாய் ஒரு கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார். பல ஆண்டு கோரிக்கையாக இருக்கும் அம்மன் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

பல ஆண்டுகளாக தார் சாலை இல்லாத அம்மன் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்கப்பட இருப்பதால் அப்பகுதி மக்கள் நகர்மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!