/* */

வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கம்

குமாரபாளையத்தில் வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர்.

HIGHLIGHTS

வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கம்
X

குமாரபாளையத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் சாலையில் மழை நீர் வெள்ளமென ஓடியது 

குமாரபாளையத்தில் வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர்.

குமாரபாளையம் மட்டும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. அமாவாசை விடுமுறை என்பதால் துணிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது. பெரும்பாலும் பொதுமக்கள் இரவு 07:00 மேல் மேற்சொன்ன கடைகள் மற்றும் இதர கடைகளுக்கு அதிகம் வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு 07:00 மணியளவில் தொடங்கிய கன மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. நேற்று அமாவாசை என்பதால் பொதுமக்கள் அதிகம் வருவார்கள் என்று ஆவலுடன் அனைத்து வியாபாரிகளும் காத்திருந்த நிலையில் இந்த மழையால் அவர்களின் வியாபாரம் பெரிதும் பாதித்தது. பல இடங்களில் விநாயகர் சிலை கடைகளும் போட்டிருந்தனர். அவர்களும் அவரசம், அவசரமாக சிலைகளை தார்பாய் கொண்டு மூடி வைக்கும் நிலை ஏற்பட்டது. சாலையில் மற்றும் கோம்பு பள்ளத்தில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.


Updated On: 26 Aug 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  2. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  3. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  4. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  5. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  6. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  7. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  9. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!