விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி.,க்கு பிடிவாரண்ட்: குமாரபாளையம் நீதிமன்றம் அதிரடி

விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி.,க்கு பிடிவாரண்ட்: குமாரபாளையம் நீதிமன்றம் அதிரடி
X

பைல் படம்.

குமாரபாளையம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி.க்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.

திருநெல்வேலியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இவர் குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சமயத்தில், 2006ம் ஆண்டு பதியப்பட்ட 2 வழக்கில் சாட்சியம் அளிக்க, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றம் சார்பில் பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 29ம் தேதி மற்றும் ஏப். 7ம் தேதி (இன்று) நடைபெற்ற விசாரணைக்கும் ஆஜராகாததால், நீதிபதி சப்னா, டி.எஸ்.பி. சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture