குமாரபாளையம் கல்லூரி மாணவர் பேனர் கட்டும்போது தவறி விழுந்து உயிரிழப்பு

உயிரிழந்த மதுரை வீரன்.
தனியார் கல்லூரி மாணவர் பேனர் கட்டும்போது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கான வகுப்பு இன்று தொடங்கி உள்ளது. இதற்காக சீனியர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பேனர் கட்டுதல், அலங்கார வளைவுகள் அமைத்தல் ஆகிய பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே கல்லூரியில் டிப்ளமோ எலெக்ட்ரானிக் கம்யூனிகேசன் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மதுரைவீரன்(வயது 20) என்ற மாணவர் நேற்று மாலை 04:15 மணியளவில் மூன்றாம் மாடியில் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.
பேனர் கட்டும் பணியில் இருந்த போது மதுரை வீரன் திடீர் என தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு, சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இறந்த மாணவர் மதுரை வீரன் திருப்பூர் மாவட்டம், நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரது அம்மா ஜோதி. அண்ணன் தினேஷ், அக்கா கலைச்செல்வி என தெரிய வந்துள்ளது. இவரது அப்பா அரசப்பன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது தனியார் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் மட்டும் இன்றி குமாரபாளையத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இறந்த மதுரை வீரன் உடலை பார்த்து சக மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu