/* */

குமாரபாளையம் கார் விபத்தில் வாலிபர் பலி

குமாரபாளையத்தில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கார் விபத்தில் வாலிபர் பலி
X

குமாரபாளையம் நான்குவழிச்சாலையில் விபத்தில் சிக்கிய கார்.

நாமக்கல் அருகே கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சூர்யா(22). இவர் மலேசியாவில் பணியாற்றி வந்தார். இவரும், இவரது மாமா விக்னேசும்(26) இன்று திருமண நிகழ்ச்சிக்காக கோவைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சூர்யா ஓட்டினார். குமாரபாளையம் சேலம்&கோவை புறவழிச்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, முன்னே சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்தை கார் சாலையின் எதிர்பக்கத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சூர்யா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சூர்யா இறந்தார். படுகாயமடைந்த விக்னேசுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 8 March 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?