/* */

குமாரபாளையத்தில் முகக்கவசமின்றி ரோமியோக்கள் உலா: கலெக்டர் அட்வைஸ்

குமாரப்பாளையம் பகுதியில், முகக்கவசமின்றி சாலையில் சுற்றித்திரிந்த வாலிபர்களை, கலெக்டர் எச்சரித்து அனுப்பினார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் முகக்கவசமின்றி ரோமியோக்கள் உலா: கலெக்டர் அட்வைஸ்
X

கொரோனா தோற்று அலை 2 மிக வேகமாக தமிழகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழக அரசு, இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கின் முதல் நாளான நேற்று, குமராபாளையம் பைபாஸ் சாலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் , வாகனத்தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அத்தியாவசியத் தேவையின்றி, ஊர் சுற்றிக் கொண்டிருந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தார்.

பின்னர், அந்த இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொரோனா தொற்று அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, மாஸ்க் அணிவதன் அவசியத்தையும் வலியுறுத்தி அறிவுரைகளை வழங்கினார். அத்துடன், சாலை விதிகளை மதிக்காது முகக்கவசம் இன்றி பயணம் செய்த ஒருசிலருக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது குமராபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 11 May 2021 2:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்