/* */

குமாரபாளையம்: குடிநீரில் சாயக்கழிவு நீர் கலப்பால் பொதுமக்கள் அவதி

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு செந்தில் மில் அருகே குடிநீரில் சாயக்கழிவு நீர் கலப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: குடிநீரில் சாயக்கழிவு நீர் கலப்பால்   பொதுமக்கள் அவதி
X

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு செந்தில் மில் அருகே குடிநீரில் சாயக்கழிவு நீர் கலந்து வரும் குழாய் இதுதான்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், அருந்ததியர் தெரு, வேமன்காட்டுவலசு,பாரதி எஸ்டேட், குளத்துகாடு உள்ளிட்ட பல பகுதி பொதுமக்கள், சேலம் கோவை புறவழிச்சாலை, செந்தில் ஸ்பின்னிங் மில் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வந்தனர். நேற்று அந்த குழாயில் வந்த தண்ணீரில் சாயக்கழிவு நீர் கலந்து, நுரையுடன் வந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் குடிநீர் பிடிக்க வழியில்லாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். இந்த குழாயில் வரும் நீரில் சாய நீர் எவ்விடத்தில் கலக்கிறது என்பது அறிந்து, உடனே அதனை சரி செய்து, பொதுமக்கள் குடிநீர் ஆதாரத்தை காப்பாற்றி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Jun 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’