/* */

கொக்கராயன்பேட்டையில் குப்பைக்கு தீ - பொதுமக்கள் அவதி

கொக்கராயன்பேட்டை காவிரி கரையோரம் குப்பைகளுக்கு ஒரு சிலர் தீ வைப்பதால் கடும் புகை மூட்டம் உண்டாகி, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கொக்கராயன் பேட்டை ஊராட்சி. இங்கு, ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் காவிரி ஆற்றங்கரையோரம் பீடி கழிவு குப்பைகள், இதர குப்பைகள் அனைத்தும் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டபடும் குப்பைகளுக்கு, சில நபர்கள் தீ வைத்துச் செல்கின்றனர். குப்பையில் இருந்து கடும் புகை வெளியாகிறது.

இதனால், காவிரிக்கரையோரப்பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை பரவுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வயதானவர்கள், மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.

எனவே கொக்கராயன்பேட்டை ஊராட்சி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகள் அனைத்தையும் குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 19 Jun 2021 8:37 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  9. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!