குமாரபாளையம் அருகே கத்தேரி சிவபுரி சிவன் கோவில் ஆண்டுவிழா

குமாரபாளையம் அருகே கத்தேரி சிவபுரி சிவன் கோவில்  ஆண்டுவிழா
X

குமாரபாளையம் அருகே சிவபுரி சிவன் கோவிலில் ஆண்டுவிழா நடந்ததையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் அருகே கத்தேரி சிவபுரி சிவன் கோவிலில் ஆண்டுவிழா நடந்தது.

குமாரபாளையம் அருகே கத்தேரி சமத்துவபுரம் சிவபுரி எனும் பகுதியில் சிவன் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு உயரமான லிங்கம் மூலவராக காட்சி தருகிறார். இந்த கோவிலின் ஆண்டுவிழா நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பெண்கள் பெருமளவில் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு மற்றும் பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பிரதோஷம் குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:-

பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோஷத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் அமுதத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமான் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தினை உண்டார். அவ்விஷம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

பிரதோஷ விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றே முக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்திற் சிவபெருமானை குறித்து அனுஷ்டிக்கப்படும் விரதமாகும். இவ்விரதத்தை விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோஷ நாளில் விரதம் தொடங்குதல் மரபு. பிரதோஷ விரதம் இருப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோஷ வேளையாகிய சூரிய அஸ்தமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போஜனம் செய்தல் வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare