குமாரபாளையத்தில் கலை நிகழ்ச்சிகள் இல்லாத காளியம்மன் திருவிழா

குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழா என்றால் கலைநிகழ்ச்சிகல் இல்லாமல் நடைபெற்றது இல்லை. காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மேடையில் புதன் முதல் ஞாயிறு வரை நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள், மெல்லிசை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறுவது வழக்கம்.
சின்னப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள வார சந்தை வளாகத்தில் இதே போல் திரைபட கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கு பெறும் பட்டி மன்றங்கள் நடைபெறும். பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, ஆகியோரும், சாலமன் பாப்பையா, லியோனி, ஞானசம்பந்தம், ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம், கலக்கல் காங்கேயன், மதுரை முத்து, உள்ளிட்ட நகைச்சுவை பிரபல பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள், நாட்டிய நாடகங்கள், தெருக்கூத்துகள் என ஐந்து நாட்களில் நகரில் பல இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு ஒரு கலை நிகழ்ச்சி கூட இல்லாத திருவிழாவாக இருப்பது கலை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, கொரோனாவால் தொழில் பாதிப்பு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu