தேய்பிறை அஷ்டமி: குமாரபாளையத்தில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர், மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, குமாரபாளையம், திருவள்ளுவர் நகர், மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில், பொதுமக்கள் சுவாமிக்கு எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய்களில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இதேபோல் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், ஊராட்சிக்கோட்டை சிவன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu