/* */

குமாரபாளையத்தில் நகை, பணம் திருட்டு: சிறுவன் கைது

குமாரபாளையத்தில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டான்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நகை, பணம் திருட்டு:  சிறுவன் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வசிப்பவர் தங்கராஜ், 53. தனியார் மில் தொழிலாளி. இவரது மனைவி ராமயம்மாள் அதே பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார்.

நேற்றுமுன்தினம் மாலை 05:30 மணியளவில் மனைவியின் உறவினர் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்ததால், தங்கராஜ், மனைவி, மகள் ஆகியோர் ஈரோட்டிற்கு பார்க்க சென்று விட்டு, இரவு 09:30 மணியளவில் வும் போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அதே பகுதியில் கரும்பு வெட்டும் சிறுவன் மாற்றி, மாற்றி பேசியதால், போலீசார் விசாரணையில் திருடியது அவன்தான் என்பது தெரியவந்தது. அவனிடமிருந்து நான்கரை பவுன் தங்க நகை, 48 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், மாத்தூர் பகுதியை சேர்ந்த ஆதித்யா, 17, என்ற சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!