/* */

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் ஜமா பந்தி

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமா பந்தியில் பொதுமக்கள் 68 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் ஜமா பந்தி
X

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமா பந்தியை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. இளவரசி துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தமிழரசி தலைமை வகித்தார். திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி ஜமாபந்தியை தொடங்கி வைத்தார். நேற்று ஆனங்கூர், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், காடச்சநல்லூர், புதுப்பாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி அக்ரஹாரம், பாப்பம்பாளையம் ஆகிய பகுதி பொதுமக்கள் 68 புகார் மனுக்கள் கொடுத்தனர்.

இதில் மோடமங்கலம் அக்ரஹாரம் பகுதி 3 பட்டா மாறுதல் புகார் மனுவிற்கு தீர்வு காணப்பட்டதுடன், முதியோர் உதவி தொகைக்கான உத்திரவும் வழங்கப்பட்டது. இன்று கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், எலந்தகுட்டை, பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், கொக்காராயன் பேட்டை, படவீடு ஆகிய பகுதிகளுக்கு ஜமா பந்தி நடைபெற்றது.

மே. 27ல் சவுதாபுரம், பல்லக்காபாளையம், அய்யம்பாளையம், அய்யம்பாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளுக்கு ஜமா பந்தி நடைபெறுகிறது.

Updated On: 25 May 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...