/* */

பள்ளிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 500 காளைகள் பங்கேற்பு

பள்ளிபாளையத்தில் முதன்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் பங்கேற்றன.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 500 காளைகள் பங்கேற்பு
X

பள்ளிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.

பள்ளிபாளையத்தில் ஐந்துபனை பகுதியில் பள்ளிபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் சி.கே. சரஸ்வதி, மாநில விவசாய அணி செயலர் நாகராஜ் ஆகியோர் கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தனர்.


மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி, மாநில பொது செயலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வாழ்த்தி பேசி, வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளை விடப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு காளையாக விடப்பட்டது. இதனை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருந்தன.

இதில் 500 காளைகள் பங்கேற்றதுடன், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாட்டினை பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி, தங்க நாணயம், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 2 Feb 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  8. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  9. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  10. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!