/* */

குமாரபாளையத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை: ஒருவர் கைது
X
குமாரபாளையம் காவல் நிலையம்.

மொபைல் போன்களில் எண்களை காட்டி நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

காலை 10:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி மற்றும் போலீசார் நேரில் சென்றபோது, அங்கு ஒருவர் மொபைல் போன் காட்டியும், வெள்ளை பேப்பரில் சில எண்களை எழுதியும் பொதுமக்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு என்று கூறி விற்பனை செய்து வந்தார்.

அவரை கையும் களவுமாக பிடித்து வெள்ளை பேப்பரில் மூன்று எண்கள் எழுதப்பட்ட வெள்ளை துண்டு சீட்டுக்கள் 4, பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் விசாரணையில் இவர் மேற்கு காலனி பகுதியை சேர்ந்த பிரபு, 36, என்பது தெரியவந்தது. குமாரபாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது