Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் பேருந்துகளில் ஆபத்தை உணராத மாணவர்கள் அலட்சிய பயணம்
குமாரபாளையம் அரசு பஸ்களில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
குமாரபாளையம் அரசு பஸ்களில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஈரோடு நகருக்கு அரசு பஸ் ஒன்று மாலை 04:50 க்கு புறப்பட்டது. பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் பலர் விபத்து அபாயம் ஏற்படும் வகையில் படியில் பயணம் செய்தனர். வழியில் சென்ற பொதுமக்களும் உள்ளே போக சொல்லி சத்தம் போட்டனர். அதனை மாணவர்கள் பொருட்படுத்தவில்லை.
இது போன்ற விதி மீறும் மாணவர்கள் மீதும், இதனை பொருட்படுத்தாத பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.