Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் அருகே சங்கர் சிமெண்ட் ஆலை சார்பில் சுதந்திர தினவிழா
குமாரபாளையம் அருகே சங்கர் சிமெண்ட் ஆலை சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
குமாரபாளையம் அருகே சங்கர் சிமெண்ட் ஆலை சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஆலையின் உதவி தலைவர் வீரபாகு தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றினார்.
அரசு உதவி பெறும் சங்கர் பள்ளி என்.சி.சி.மாணவ, மாணவியர் அணிவகுப்பு நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு மற்றும் பாதுகாவல் அலுவலர் ஆத்மராமன் செய்திருந்தார்.
இதே போல் குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப பூங்கா, காவேரி உயர் தொழில் நுட்ப பூங்கா ஆகியவற்றிலும் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது.