குமாரபாளையம் பகுதிகளில் அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கம்

குமாரபாளையம் பகுதிகளில் அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கம்
X

குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் சடையம்பாளையம் கிராமப்பகுதி மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மை செய்தல் பணி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் சடையம்பாளையத்தில் துவக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார்.

ஏழு நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில் சர்க்கரை நோய் கண்டறிதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு, கிராமத்தை தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடுதல், இல்லம் தோறும் கல்வி திட்டம், பல் பாதுகாப்பு குறித்த முகாம், தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், நூலகத்தை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு ஆகியன நடைபெறவுள்ளன. நேற்று சடையம்பாளையம் கிராமப்பகுதி மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல் பணி நடைபெற்றது.

இந்த முகாமில் 50 மாணாக்கர்கள் பங்கேற்றனர். கத்தேரி ஊராட்சி மன்ற துணை தலைவி கவிதாமேரி, ஆர்.சி. பள்ளியின் தலைமையாசிரியர் அலெக்ஸாண்டர், கல்லூரி வணிகவியல் துறை தலைவர் ரகுபதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஞானதீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai chatbots for business