குமாரபாளையத்தில் காலையில் வெளுத்து வாங்கிய வெயில் மாலையில் மழை

குமாரபாளையத்தில் காலையில் வெளுத்து வாங்கிய வெயில்  மாலையில் மழை
X

குமாரபாளையத்தில் நேற்று மாலை மழை பெய்தது.

குமாரபாளையத்தில் நேற்று பகல் முழுதும் வெளுத்து வாங்கிய நிலையில், மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

குமாரபாளையத்தில் பொதுவாக பகலில் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரவே அஞ்சும் நிலை குமாரபாளையத்தில் இருந்து வருகிறது. சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 04:00 மணியளவில் குளிர் காற்றுடன் கன மழை பெய்தது. இது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. ,இதனால் கடும் வெப்பம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture