/* */

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி மிக சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்  அறிவியல் கண்காட்சி
X

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் ரேணுகா தலைமையில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு கல்வியியல் கல்லூரி (பொ) முதல்வர் அருணாச்சலம் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் இயற்பியல் துறை மாணவ, மாணவியர் பல்வேறு படைப்புகளை உருவாக்கி, பார்வைக்கு வைத்திருந்தனர். சோலார் பயன்பாடுகள், காந்தசக்தி அலாரம், தானியங்கி போக்குவரத்து சிக்னல், அனல் மின்சார பயன்பாடுகள், தானியங்கி தெரு விளக்குகள், எதிர்கால எரிபொருள், பென்சில் வடிவில் வெல்டிங் சாதனம், காந்த சக்தி குளிர்சாதனம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படைப்புகள் மாணவ, மாணவியர்களால் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கல்வியியல் கல்லூரி முதல்வர் அருணாச்சலம், அனைத்து படைப்புகளுக்கும் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

அவர பேசும்போது கூறியதாவது:-

மனித வாழ்வில் அறிவியலை பிரிக்க முடியாது.அறிவியல் இல்லாாமல் மனிதனும் இல்லை உலகமும் இல்லை. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் அறிவியல் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. எனவே மாணவ, மாணவியர்கள் தங்களது அறிவியல் அறிவை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் யாவும் அறிவியல் படைப்புகளே. பல அறிவியல் ஞானிகளால்தான் மனித வாழ்வு மேன்மையடைந்து வருகிறது. எதிர்கால சந்ததிகளுக்கு மேலும் புதிய படைப்புகள் உருவாக்கி தரும் கடமை உங்கள் கைகளில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பேராசிரியர்கள் அனுராதா, பவித்ரா, ரகுபதி, ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 26 Feb 2024 3:17 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  4. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  5. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  10. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்