/* */

பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள்.

பவானியில், கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு உயர்த்திய கூலியை வழங்கக்கோரி, பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்சீட், நெசவாளர் மற்றும் சாய தொழிலாளர்கள் சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில செயலர் சின்னசாமி, சங்க செயலர் சித்தையன், சி.பி.ஐ. ஈரோடு வடக்கு மாவட்ட செயலர் மாதேஸ்வரன் ஆகியோர், கோரிக்கை குறித்து பேசினர். கைத்தறி நெசவாளர்களின் சூழலை உணர்ந்த தமிழக அரசு, அடிப்படை கூலியில் 10 சதவீதம், அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்வு வழங்குவதாக கைத்தறித்துறை மானிய கோரிக்கையில் அறிவித்தது.பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம், கைத்தறி நெசவாளர் சங்கத்தினர்  கோரிக்கை மனு அளித்தனர்.

இக்கூலி உயர்வு இதுவரையில் கிடைக்காததால் நெசவாளர்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளர்கள். எனவே விரைவாக அரசு இக்கூலி உயர்வை வழங்க வேண்டும்,நெசவாளர்களுக்கான போனஸை தறிக்கூட உரிமையாளர்கள் வழங்க வேண்டும்; நெசவாளர்கள் மாதம் முழுதும் நெய்வதற்கு கூட்டுறவு சங்கங்கள் நூல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சங்க துணை தலைவர் ராசம்மாள், கைத்தறி சம்மேளன மாநில குழு உறுப்பினர் சுந்தரம், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பூபதி, சங்க பொருளாளர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக, பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On: 23 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்