3 கிலோ போதை பொருட்கள் விற்ற இருவருக்கு குண்டாஸ்

3 கிலோ போதை பொருட்கள்  விற்ற இருவருக்கு குண்டாஸ்
X
குமாரபாளையத்தில் 3 கிலோ போதை பொருட்கள் விற்ற இருவர் குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டனர்

3 கிலோ போதை பொருட்கள் விற்ற இருவருக்கு குண்டாஸ்

குமாரபாளையத்தில் 3 கிலோ போதை பொருட்கள் விற்ற இருவர் குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

போனில் வந்த தகவல் படி அக். 9ல் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார், இடைப்பாடி சாலை, காவேரி நகர், புதிய காவேரி பாலம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அவ்வழியாக ஹோண்டா மேஸ்ட்ரோ டூவீலரில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன், 40, இடைப்பாடி, செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த மிராண்டா செந்தில், 45, என்பதும், இவர்கள் போதை பொருட்கள் விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 3.100 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். நேற்று மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai solutions for small business