Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்
குமாரபாளையம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்தார்.
HIGHLIGHTS
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பாயி, வயது 80. இவர் பிப். 4ல் மாலை 05:00 மணியளவில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அதே பகுதியில் இருந்த மின் கம்பத்தில் மின் ஊழியர்கள் சிலர் பணியாற்றிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 05:00 மணியளவில் மின்கம்பி அறுந்து, கருப்பாயி தலை மேல் விழுந்ததில் ரத்தகாயம் ஏற்பட்டது. மயக்க நிலையில் இருந்த அவர், தொடர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.