/* */

கஞ்சா விற்ற நால்வர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்

குமாரபாளையத்தில் கஞ்சா விற்ற நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட க்ரைம் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

கஞ்சா விற்ற நால்வர் கைது   உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
X

குமாரபாளையத்தில் கஞ்சா விற்ற நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ. க்கள் குணசேகரன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, காவேரி நகர் புதிய காவிரி பாலம் அடியில் ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, நான்கு நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மூவாயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், குமாரபாளையம் கவுதம்ராஜ், (31), குப்புராஜ், (31), சரவணன், (39), வீரமணி, (32), என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. சந்தியா, உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பள்ளிபாளையம் பிரிவு அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி, (70), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து புகையிலை பொருட்கள் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், (60). முன்னாள் மின் வாரிய ஊழியர். இவரது மனைவி பிரபாவதி, (51). மேட்டூர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். ரவிச்சந்திரன் பல ஆண்டுகளாக மனைவியை பிரிந்து பல பெண்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை பிரபாவதியின் அக்கா தேவி போன் செய்து, குமாரபாளையம், எதிர்மேடு, பாரதி நகர் பகுதியில் உள்ள செல்வி என்பவர் வீட்டில், ரவிச்சந்திரன் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். இது பற்றி தகவலறிந்த பிரபாவதி, உறவினர்களுடன் நேரில் சென்று பார்த்த போது, செல்வி என்பவர் வீட்டில் தனது கணவர் ரவிச்சந்திரன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் பிரபாவதி புகார் செய்து, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை செய்திட வேண்டியும் புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 18 Feb 2024 10:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து