முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு..!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு..!

குமாரபாளையம் தி,மு.க. சார்பில் அண்ணாவின் 55வது நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையத்தில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

குமாரபாளையம் தி,மு.க. சார்பில் அண்ணாவின் 55வது நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம் கட்சி அலுவலகத்திலிருந்து சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் நடந்தது. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வடக்கு, தெற்கு நகர பொறுப்பாளர்கள் விஜய்கண்ணன், ஞானசேகரன், நிர்வாகிகள் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம், இளங்கோ, ராமமூர்த்தி, வேலுமணி, ராதிகா, தேவி உள்பட பலர் பங்கேற்றனர். தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து, பயணியர் மாளிகை வரை நடந்தது. அங்குள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பழனிசாமி, ரவி, அர்ச்சுனன், சிங்காரவேல், வெங்கடேசன், பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இரு இடங்களிலும் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்று, அண்ணா ஆற்றிய சாதனைகள், மேடை பேச்சு அனுபவங்கள், சட்டமன்றத்தில் சாதுர்யமாக எதிர் கட்சிகளுக்கு கொடுத்த பதிலடிகள், தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து பேசினார்கள்.

Tags

Next Story