/* */

பள்ளிபாளையம் பகுதியில் ஆக.26ல் மாதாந்திர பராமரிப்புக்காக மின் நிறுத்தம்

பள்ளிபாளையம் பகுதியில் பராமரிப்புபணிக்காக ஆக. 26ல் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம்செய்யப்பட உள்ளது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் பகுதியில் ஆக.26ல் மாதாந்திர பராமரிப்புக்காக  மின் நிறுத்தம்
X

பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆக. 26ல் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்/

Updated On: 24 Aug 2022 9:15 AM GMT

Related News