/* */

குமாரபாளையம்: காவிரியில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்

காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் திரும்பி வராதது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்:  காவிரியில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்
X

சித்தரிக்கப்பட்ட காட்சி

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை சானார்பாளையம் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன், 45. மீன் பிடிக்கும் தொழில் செய்து வருபவர். இவர் நேற்று காலை 11:00 மணியளவில் காவிரி ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்றார். வழக்கமாக மாலை 03:00 மணியளவில் வீடு திரும்பும் இவர், நேற்று வீடு திரும்பவில்லை.

இதனால் கவலையடைந்த உறவினர்கள், குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் நேரில் வந்த மீட்புக்குழுவினர், காவிரி ஆற்றங்கரையில் பரிசல் மட்டும் இருப்பதை கண்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று எண்ணி, மாலை 06:00 மணி வரை தேடி பார்த்தனர். இருள் சூழ்ந்த நிலையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி அவரது மனைவி லட்சுமி, 39, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மீன்பிடிக்க தோட்டாவை போட்ட போது, கையில் வெடித்து, லட்சுமணன் தண்ணீரில் மயக்க நிலையில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பற்றி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!